இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூலிகை சூப் / Herbal Soup / Health Recopies / Health Tips in Tamil / Tamil Health Tips / Cooking Tips in Tamil / Tamil Tips / Herbals / Health

படம்
 தேவையான பொருட்கள்: சீரகம் 1/2 தேக்கரண்டி இஞ்சி 1 துண்டு பட்டை சிறிதளவு வெள்ளை பூண்டு 10 பற்கள் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி தனியா சிறிதளவு கிராம்பு 7 தண்ணீர் 750 மி.லி உப்பு தேவையான அளவு சூப் செய்முறை : ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 தேக்கரண்டி சீரகத்தையும், மிளகையும், 1 தேக்கரண்டி மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடி களுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும். ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 மி.லி., தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும்.  (குறிப்பு:- பிரஷர் குக்கர் பயன்படுத்வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 மி.லி.,க்கு பதில் 1250 மி.லி.,தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வை

உங்ககிட்ட தக்காளி சாஸ் இருக்கா ?? / Tomato Sauce / Tamil Health Tips / Kitchen Tips / Cleaning Tips / Tips in Tamil / Tamil Cleaning Tips

படம்
உங்ககிட்ட தக்காளி சாஸ் இருக்கா ? வாங்க கிச்சன்ல சுத்தம் பண்ணலாம். காப்பர் பொருட்கள் : பெரும்பாலான இந்திய வீடுகளில் காப்பர் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்த பொருட்களை சுத்தம் செய்வது மிகவும் கடினம். ஆனால் வீட்டில் தக்காளி சாஸ் இருந்தால், அதைக் கொண்டு எளிதில் சுத்தம் செய்யலாம். அதற்கு அழுக்கு அதிகமாக இருக்கும் காப்பர் பொருட்களில் தக்காளி சாஸை தடவி 3-4 மணிநேரம் ஊற வைத்து, பின் எலுமிச்சை சாறு பிழியப்பட்ட வெதுவெதுப்பான நீரால் தேய்த்து கழுவி, பின் டிஷ் வாஷ் லிக்விட் பயன்படுத்தி தேய்த்து கழுவினால், காப்பர் பாத்திரங்கள் புத்தம் புதிது போல் ஜொலிக்கும். குழாய்கள்: உங்கள் வீட்டில் உள்ள குழாய்களானது துருப்பிடித்து இருந்தால், அந்த துருவை எளிதில் நீக்க தக்காளி சாஸ் பெரிதும் உதவி புரியும். அதற்கு தக்காளி சாஸை துருப்பிடித்த குழாய்களின் மீது தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் நீரில் எலுமிச்சை சாறு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அந்நீரை ஸ்க்ரப்பரில் நனைத்து தேய்த்து கழுவ, குழாய் புதிது போன்று காட்சியளிக்கும். இரும்பு பாத்திரங்களில் உள்ள

உயிர் உரம் தயாரிக்கலாம் வாங்க | \ Fertilizer / Gardening Tips in Tamil / Tamil Garden / Gardening / Tips in Tamil / Home Garden / Garden

படம்
ரேஷன் அரிசி இருந்தால் போதும் நம் வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ்சிறு செடிகள் முதல் மரம், கொடிகளும், மாடி தோட்டத்தில் வளர்க்கக்கூடிய அத்தனை தாவரங்களும் செழித்து வளரக்கூடிய வகையில் உயிர் உரத்தை தயார் செய்து விடலாம். சக்தி வாய்ந்த உரங்களை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று இல்லை. சிறிது நேரத்தை ஒதுக்கினால் எளிமையான பொருட்களை கொண்டும் நாமே இந்த உரங்களை எல்லாம் தயார் செய்து விட முடியும். அப்படியான ஒரு சக்தி வாய்ந்த உயிர் உரம் பற்றிய தோட்ட குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். உயிர் உரம் தயாரிக்க முதலில் கால் கிலோ அளவிற்கு ரேஷன் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். நன்கு அரிசி புளித்திருக்கும். இப்பொழுது தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு, இதை மண் கலங்களில் சேகரிக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் எந்த மண் பாத்திரத்திலும் இதை வைக்கலாம். மேலே ஒரு மண் கல தட்டை வைத்து மூடி கொள்ளுங்கள். அதன் மீது ஒரு மெல்லிய காட்டன் துணியை விரித்து இறுக்கமாக கயிறை வைத்து கழுத்தை சுற்றி கட
படம்
 பெண்... ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் தெரியுமா ஆம் இந்த ரகசியம் பல ஆண்களுக்கு தெரியாது..! தாய்மை உறுதியாகி விட்டதை தன் கணவனுக்கு முதன் முதலில் வெட்கத்துடன் சொல்லும் தருணத்தில் பெண் அழகாகிறாள். முதன் முதலாய் சேலை உடுத்தி தெருவில் நடக்கும் போது அந்த வெட்கத்தில் உதட்டை சுழிக்கும் போதெல்லாம் பெண் அழகாகிறாள். அதிகாலையில் வாசலில் கோலம் போடுகையில் முந்தானையை இழுத்து பாவாடைக்குள் சொருகி தன் வலது கையை நெற்றியில் துடைக்கும் நேரத்தில் பெண் அழகாகிறாள்.. அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடித்து கொண்டை போட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள். தன் மகளுக்கு சிக்கெடுத்து தலை சீவி அந்த ஜடையை போட சீப்பை தன் தலையில் வைத்து இரு உதடுகளை முறுக்குவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள். சமைக்கும் போது கரண்டியால் ஒரு சொட்டு குழம்பை உள்ளங்கையால் நக்கி பார்த்து ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை அகல திறப்பாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள். தலைக்குளித்த ஈரக்கூந்தலில் வழியும் நீர் பின் பக்க ரவிக்கையில் நனைந்து அந்த ஈரச்சுவடு தெரிய கோவிலுக்கு வருவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள். அரக்க பறக்க எழுந்து குளித்த